அமீரகத் தமிழ் மன்றம் மாபெரும் கலைவிழா ஒன்றினை வரும் மே மாதம் அமீரகத்தில் நடத்த உத்தேசித்திருக்கிறது. இந்த விழாவில் தமிழ் தொலைக்காட்சிகளின் சிறப்பான நிகழ்ச்சிகளை மேடையில் நடத்திக் காட்ட இந்த மன்றம் முன்வந்திருக்கிறது. தொலைக்காட்சிகளில் கண்டு பரவசமடைந்த நிகழ்ச்சிகளை நேரில் காண அரிய வாய்ப்பு!!
மேடை நிகழ்ச்சிகளாக இடம்பெறும் சில நிகழ்ச்சிகள் :
இனிய தமிழ்த் திரைப்பாடல்களின் அணிவகுப்பு!
“அசத்தப் போவது யாரு?”
சாதாரணர்களை அசாதரணர்களாக்கும் திறன் வெளிகாட்டும் முயற்சி!
“மானாட மயிலாட”
ஆட்டமும், பாட்டமும் மாந்தர்க்கு மகிழ்ச்சி!
நிகழ்ச்சி நடைபெறும் நாள் மற்றும் நேரம் : மே மாதம் ஒன்பதாம் திகதி, வெள்ளிக்கிழமை, மாலை நான்கு முப்பது மணிக்கு.
விழா நடைபெறும் இடம் : ஷேக்ராஷித் கலையரங்கம், இந்தியன் உயர்நிலைப் பள்ளி வளாகம், துபாய்.
இருக்கைகளை முன்பதிவு செய்ய, மற்ற விபரங்களுக்கு : 04 2976214 (காலை ஒன்பது மணி முதல் பண்ணிரெண்டு மணி வரை / மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை) 050 6550245 & 050 6514825