* கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த முதல் திரைப்படம் "உதிரிப் பூக்கள்"
* "மழலைப் பட்டாளம்" என்ற திரைப்படத்தை இயக்கியவர் நடிகை லட்சுமி
* இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் முதல் திரைப்படம் "அவள் ஒரு பச்சைக் குழந்தை"
* நடிகர் சிவக்குமார் நடித்த முதல் திரைப்படம் "காக்கும் கரங்கள்". அவரது நூறாவது திரைப்படம் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி"
* புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் வசனம் மற்றும் பாடல்கள் எழுதிய திரைப்படம் "வளையாபதி"
* திரையுலகில் சிவாஜி கணேசன் பேசிய முதல் வசனம் "சக்சஸ்... வெற்றி!"
* இயக்குனர் பாரதிராஜா கதாநாயகனாக நடித்த திரைப்படம் "கல்லுக்குள் ஈரம்"
* நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்த திரைப்படம் "பணம் பத்தும் செய்யும்"
* குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி தெலுங்குப் படங்களில் சிவரஞ்சனி என்ற பெயரிலும், மலையாளப் படங்களில் கவுரி என்ற பெயரிலும் நடித்து வந்தார்.
* ரஜினிகாந்துக்கு பிடித்த தமிழ் நடிகை லட்சுமி. இந்தி நடிகை ஷர்மிளா தாகூர். சூப்பர் ஸ்டாருக்கு பிடித்த பின்னணி பாடகர் சந்திரபாபு.
* நடிகை சவுகார் ஜானகி தயாரித்த முதல் திரைப்படம் காவியத்தலைவி. கே. பாலச்சந்தர் இயக்கினார்.
* நடிகை பத்மினி தொடர்ச்சியாக 30 வருடங்கள் நடித்தார். சாவித்திரி 28 வருடங்கள் நடித்தார்.
* மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக சரோஜாதேவி 24 படங்கள் நடித்தார். ஜெயலலிதா 28 படங்கள் நடித்தார்.
* அம்மா என்ற திரைப்படத்துக்கு எழுத்தாளர் சாண்டில்யன் வசனம் எழுதியிருக்கிறார்.
* 1932ல் வெளியான "இந்திர சபா" திரைப்படத்தில் மொத்தம் 72 பாடல்கள்.
* சினிமாவுக்கென வெளியான முதல் பத்திரிகை மூவி மிர்ரர் 1927ல் தொடங்கப்பட்டது.
* தமிழ் சினிமாவின் முதல் இரட்டைவேட திரைப்படம், சிவாஜி கணேசன் நடித்த "உத்தம புத்திரன்"
* தமிழில் வெளிவந்த முதல் யதார்த்த கலைப்படம் "ஏழை படும் பாடு"
* கமல்ஹாசனுக்கு பிடித்த விளையாட்டு கிரிக்கெட். பிடித்த விளையாட்டு வீரர் சுனில் கவாஸ்கர்.
* கல்யாணம் பண்ணிப்பார், செல்லப்பிள்ளை இரு படங்களில் மட்டுமே சாவித்திரி வில்லியாக நடித்தார்.
* 1936ல் திரையுலகத்துக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர் 1977 வரை தொடர்ச்சியாக 41 ஆண்டுகள் திரையுலகில் பணியாற்றினார்.
* ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷ் அப்பணியை ராஜினாமா செய்துவிட்டே திரையுலகில் நுழைந்தார்.
Friday, August 24, 2007
சினி சிப்ஸ் - 4
Posted by PYRAMID SAIMIRA at 8/24/2007 03:43:00 PM 1 comments
Labels: சினிசிப்ஸ்
Thursday, August 16, 2007
சினி சிப்ஸ் - 3

* 1953ல் வெளியான "திரும்பிப் பார்" திரைப்படத்தில் வில்லனாக சிவாஜி கணேசன் நடித்தார். அந்த வருடத்தின் சிறந்த வில்லனாக ஒரு பத்திரிகையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டார் சிவாஜி.
* "சண்டிராணி" என்ற திரைப்படத்தின் திரைக்கதையையும், வசனத்தையும் எழுதியவர் பானுமதி.
* தயாரிப்பாளர் உட்பட முழுக்க முழுக்க புதுமுகங்களால் உருவாக்கப்பட்ட "ஒரு தலை ராகம்" 33 வாரங்கள் ஓடி அபார சாதனை புரிந்தது.
* துளசி, வண்ணக் கனவுகள், அடிமை விலங்கு, நாற்காலி கனவுகள் ஆகிய திரைப்படங்களுக்கு கவிஞர் வைரமுத்து வசனம் எழுதியிருக்கிறார்.
* நடிக-நடிகையருக்கு மேக்கப் போடாமல் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் வீணை எஸ். பாலச்சந்தர் இயக்கிய "ஓடாதே நில்"
* நடிகர் திலகம் நடித்த கதாபாத்திரங்களிலேயே அவருக்கு பிடித்தது தில்லானா மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்.
* வட்டாரத் தமிழ் மொழியில் வசனம் எழுதப்பட்டு வெளிவந்த முதல் திரைப்படம் "மக்களைப் பெற்ற மகராசி"
* நிஜ தம்பதியரான கலைவாணர் என்.எஸ்.கே - மதுரம் தம்பதி, மொத்தம் 75 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
* ஜெமினி கணேசன் நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் ஜெமினி பிக்சர்ஸ் அதிபர் எஸ்.எஸ். வாசனால் இயக்கப்பட்டது.
* 1959ல் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது. சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
Posted by PYRAMID SAIMIRA at 8/16/2007 04:48:00 PM 1 comments
Labels: சினிசிப்ஸ்