Tuesday, August 5, 2008

கண்ணாமூச்சி ரே.. ரே..

'ஆசை தான் அழிவுக்கு காரணம்!'புத்தன் சொல்லிதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? நம் வாழ்க்கையிலேயே பலரைப் பார்த்திருப்போமே? மண்ணாசை மன்னனையே கவிழ்க்கும், பேராசை ஆண்டியையும் அலைக்கழிக்கும். ஆசைப்பட்டு ஆடி அடங்கிப் போனவனின் வாழ்க்கை தான் இந்த மாத சிம்ரன் சின்னத்திரையில் வரும் ‘கண்ணாமூச்சி ரே.. ரே..'

அழகான மனைவி, ஆசைக்கு குழந்தை என்று அளவான வாழ்க்கை வாழ்பவனுக்கு திடீரென்று கொழுந்தியாள் மீதும் ஆசை வருகிறது. ஆசைக்கு அடிமையானவன் ஆடும் ஆட்டங்களும், முடிவும் என்னவென்பதை இம்மாத குறுந்தொடரில் காணலாம். ஆடிமாதத்தில் அம்மனாக அவதாரமெடுத்த சிம்ரன், ஆவணியில் மாறுபட்ட நடிப்பில் அசத்தப்போகிறார்.

சிம்ரனுடன் ராம்ஜி, சேத்தன், பிருந்தாதாஸ், ராஜசேகர், அமரசிகாமணி, சங்கீதாபாலன், வந்தனா, பேபி ஹரிணி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். மூலக்கதை : குரு தனபால். கதை இலாகா : சபரீஷ்வரன், திலீபன், மணி. திரைக்கதை, வசனம் : ஸ்ரீனிவாஸ் வெங்கடாச்சலம். ஒளிப்பதிவு : ஸ்ரீனிவாஸ். இயக்கம் : பாலாஜி யாதவ். கிரியேட்டிவ் ஹெட் : சுபாவெங்கட்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30க்கு காணத்தவறாதீர்கள் சிம்ரன் சின்னத்திரை.





0 comments: