Monday, September 1, 2008

தடைகளை தாண்டி வெளிவரும் சரோஜா!


அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் வரும் 5ம் தேதி வெளிவரும் சரோஜா திரைப்படத்துக்கு தடை என்று சில செய்தித்தாள்களிலும், இணையத் தளங்களிலும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன. இந்தியன் வங்கியில் சரோஜா திரைப்படத்துக்காக தயாரிப்பாளர் வாங்கிய கடனுக்காக திரைப்படத்தை வெளியிட இடைக்காலத்தடையை நீதிமன்றம் விதித்திருந்ததாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இச்செய்தி பொய்யானது என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. கடன் வசூலிக்கும் தீர்ப்பாயத்தில் வந்திருக்கும் விவகாரம் வேறு பழைய விவகாரமென்றும், அந்த விவகாரத்துக்கும் சரோஜா படத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் தயாரிப்பாளர் தரப்பு கூறியிருக்கிறது. மேலும் இவ்விவகாரம் நேற்றே தீர்க்கப்பட்டுவிட்டது. படம் வெளியாவதில் எந்த சிக்கலுமில்லை, யாரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

வருகிற 5ஆம் தேதி 'சரோஜா' வெளிவருகிறாள். சென்னை-600028 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படம் இது என்பதால் மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. சென்னை-28 இளைஞர் படையோடு பிரகாஷ்ராஜ், ஜெயராம் ஆகிய முன்னணி மூத்த நடிகர்களும் இணைந்திருப்பதால் திரையுலகிலும் இப்படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

1 comments:

  1. said...

    சரோஜா வசூல் சாதனை புரிய வாழ்த்துக்கள்