Thursday, July 3, 2008

200வது நாள் காணும் ரேகா ஐபிஎஸ்!

மெகாசீரியல் என்றாலே நாயகி மூக்கை சிந்திக்கொண்டு தானிருக்க வேண்டுமா? கிரண்பேடி மாதிரி எதிரிகளை பறந்து பறந்து அடிக்கக்கூடாதா? என்று சிந்தித்ததின் விளைவே ரேகா ஐபிஎஸ் நெடுந்தொடர். மற்ற மெகாசீரியல்களின் ட்ரெண்டோடு மாறுபட்டு வந்த இந்த தொடர் எத்தைகைய வரவேற்பை பெறும் என்ற ஐயம் ஆரம்பத்தில் அனைவருக்கும் இருந்தது.

ஐயங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி 200வது எபிசோடை கொண்டாடுகிறார் ரேகா ஐ.பி.எஸ். கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது இத்தொடர். கதாநாயகனாக விஜய் ஆதிராஜூம், கதாநாயகியாக அனுஹாசனும் நடிக்கிறார்கள்.

கதை - சித்ரா லட்சுமணன், திரைக்கதை - தவமணி வசீகரன். வசனம் - ஆர்.என்.ஆர்.மனோகர், ஒளிப்பதிவு - தியாகராஜன், இயக்கம் : ஓ.என்.ரத்னம், கிரியேட்டிவ் ஹெட் - சுபாவெங்கட்.









1 comments:

  1. Anonymous said...

    இந்தக் கதையே கதாநாயகி அனுஹாசனுக்காக உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது.. சண்டைக் காட்சிகள்.. மோதல்கள் என்று தூள் பறக்கிறது..