Saturday, May 3, 2008

உடை - அடுத்த சர்ச்சை ரெடி!


சிவாஜி பட விழாவில் ஸ்ரேயா அணிந்து வந்திருந்த உடை சர்ச்சைக்குள்ளானது. முதல்வர் கலந்துகொள்ளும் விழாவில் இப்படித்தான் உடை அணிவதா? என்று பல அடிப்படைவாதிகள் கேள்விகள் எழுப்பியதோடு, வழக்குகளும் தொடுத்தார்கள். அதுபோலவே படத்துவக்க விழா ஒன்றில் செருப்புக்காலோடு மேடையில் குஷ்பு தோன்றியதும் சர்ச்சைக்குள்ளானது. அதுகுறித்த வழக்குகளை குஷ்பு சந்தித்து வருகிறார்.

இப்போது லேட்டஸ்டாக மல்லிகா ஷெராவத் சர்ச்சைக்கு கச்சை கட்டிக்கொண்டிருக்கிறார். தசாவதாராம் இசை வெளியீடுக்காக ஜாக்கிசானோடு வந்தவர் அணிந்து வந்திருந்த உடை எல்லோரது கண்ணையும் உறுத்தியிருக்கிறது. பொதுஜனம் ஒருவர் காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார்.

ஸ்டில்லை பார்த்தால் உடை கொஞ்சம் ஓவர்தான் என்று தோன்றுகிறது!

2 comments:

  1. said...

    காமாலை கண்ணுய்யா உங்களுக்கெல்லாம்..

    இதையெல்லாம் 'கலாரசனை'யோட பாக்கணுமாக்கும்..

    அப்பத்தான் 'எதுவும்' அசிங்கமாத் தெரியாதாக்கும்..

  2. said...

    நேரில் இப்படி உடையணிந்து வந்தால் தான் தப்பா? இதை விட மோசமான உடைகளையும் அசைவுகளையும் நீங்கள் (அல்லது பொதுவாகத் திரைத்துறையினர்) விற்கும் படங்களில் காண இயல்கிறதே? அதை சுவரொட்டி, வார இதழ்கள், திரைக் காட்சிகள் என்று வீடு முழுதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் பரப்புகிறீர்களே? அப்ப அது பரவாயில்லியா? இதைப்பற்றி வழக்கு போடும், கருத்து சொல்லும் மற்றவர்களை விட்டு விடுவோம்.

    திரைத் துறையைச் சேர்ந்த யாருக்கும்

    //ஸ்டில்லை பார்த்தால் உடை கொஞ்சம் ஓவர்தான் என்று தோன்றுகிறது!//

    என்று சொல்லும் தார்மீகத் தகுதி கிடையாது.