Monday, May 12, 2008

நாட்டு மக்களுக்கு நமீதா அறிவிப்பது என்னவென்றால்...

ஓராண்டுக்கு மேல் தொடர்ச்சியாக ஒரு நடிகை பரபரப்பாக ரசிகர்கள் மத்தியில் பேசப்படுவது தமிழ் திரையுலகில் அபூர்வம். தமிழ் சினிமாவில் நடிகர்களே அதிகம் பேசப்படுவார்கள். நடிகைகள் பெயரெடுப்பது மிகக்கடினம். ஆயினும் இவற்றுக்கு விதிவிலக்காக சில நடிகைகள் உண்டு. சரோஜாதேவியில் ஆரம்பித்து ஸ்ரீதேவி, சில்க், கவுதமி, குஷ்பு என்று பல ஆண்டுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்காக இருந்த நடிகைகளும் உண்டு. இவர்களின் லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் நமீதா.

இன்றைய தேதியில் நமீதா எதை செய்தாலும் அது தமிழ்நாட்டின் பரபரப்பு செய்தியாகிவிடுகிறது. மீடியாக்களின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார். பத்திரிகையாளர்களிடம் கொஞ்சும் தமிழில் மனந்திறந்து பேசுகிறார். ரசிகர்கள் மத்தியில் தேவதை போல உலா வருகிறார். கதாநாயகியாக தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் கிடைத்த கேரக்டரில் நடித்து நன்கு ஸ்கோர் செய்கிறார்.

கடந்த பத்தாம் தேதி தனது பிறந்தநாளை பெற்றோரை இழந்த குழந்தைகளோடு கொண்டாடினார் நமீதா. எத்தனையாவது பிறந்தநாள் என்று கேட்டால் பண்ணிரண்டிலிருந்து பதிமூன்று என்று சீரியஸாக சொல்கிறார். அவரது பாஸ்போர்ட் தகவல்படி பார்த்தால் அது இருபத்தைந்தாவது பிறந்தநாள். இனிமேல் கவர்ச்சியை மட்டும் நம்பாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறார்.

விஜயசாந்தி நடித்தது மாதிரியான அதிரடி வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறார். சூப்பர் வுமனாக மாறி வில்லன்களை பறந்து, பறந்து அடிப்பது மாதிரியான கேரக்டர் கிடைத்தால் அல்வா மாதிரி எடுத்துக் கொள்வேன் என்கிறார். இப்போது ஸ்ரீகாந்துடன் இவர் நடித்துவரும் இந்திரவிழா இவரது கேரியரில் முக்கியமான படமாம்.

படத்தில் நமீதா ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிபராக நடிக்கிறாராம். இலக்கை அடைய எதை வேண்டுமானாலும் மூலதனமாக போடலாம், உடலைக்கூட என்று சொல்லும் கேரக்டராம். நடிக்க நிறைய ஸ்கோப் இருப்பதால் இந்த வேடம் வந்ததுமே லபக்கென்று பிடித்துக் கொண்டாராம் நமீதா. மெசேஜ் சொல்லும் கேரக்டர் என்பதால் இந்தப் படம் வெளிவந்த பிறகு நிறைய வித்தியாசமான வேடங்கள் தன்னை தேடிவரும் என்று நம்புகிறார்.

இந்திரவிழா திரைப்படத்தின் சில ஸ்டில்கள் :













காணத்தவறாதீர்கள்!! நமீதா! - குளோஸ் அப் ஷாட்!

0 comments: