Friday, May 30, 2008

மீண்டும் “தர்மயுத்தம்!”

மாதம் ஒரு குறுந்தொடர் என்ற வித்தியாசமான கான்செப்டில் ஒளிபரப்பாகும் சிம்ரன் திரையில் அடுத்து ஜூன் 2ஆம் தேதி, திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகவிருப்பது “தர்ம யுத்தம்”

செண்டிமெண்டோ, அழுகாச்சிக் காவியமோ இல்லாது இக்குறுந்தொடரின் கதை விஞ்ஞானம், க்ரைம் கலந்து பரபரப்பான அனுபவத்தை தொடர் பார்ப்பவர்களுக்கு தரும். மங்கை என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் சிம்ரன். ஒய்.ஜி.மகேந்திரன், சுலக்சணா, மோகன் ஷர்மா, ஸ்யாம் கணேஷ், அகிலா ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் சிம்ரனோடு மின்னப் போகிறார்கள்.

தர்மயுத்தம் தொடருக்கான கதை, திரைக்கதையை செந்தமிழன் எழுதியிருக்கிறார். வெங்கடேஷ் வசனம், ஒளிப்பதிவு ஸ்ரீனிவாஸ், இயக்கம் அஸ்வின் பாஸ்கர், கிரியேட்டிவ் ஹெட் சுபா வெங்கட்.

ஜூன் 2 முதல் உங்கள் ஜெயா டிவியில் தினமும் இரவு 8.30 மணிக்கு சிம்ரன் திரையை காணத் தவறாதீர்கள்!

சிம்ரன் திரை பார்ப்பவர்களுக்கு தினம் தினம் தங்கமும் பரிசாக உண்டு!!




0 comments: