Friday, June 27, 2008

14 வேடங்களில் சிம்ரன்!





தசாவதாரத்தில் கூட கமல்ஹாசன் பத்து வேடங்களில் தான் நடித்தார். சிம்ரன் 14 வேடங்களில் சிம்ரன் சின்னத்திரையில் தோன்ற இருக்கிறார்.

மனிதர்களுக்கு தன்னம்பிக்கையையும், பக்தியையும் தரவும், தீயவர்களுக்கு தகுந்த தண்டனையை தரவும் ஆதிபராசக்தி அம்மன் நடத்தும் திருவிளையாடல் தான் இந்தமாத சிம்ரன் திரையில் வர இருக்கும் ‘நவவெள்ளி'. தெய்வரகசியத்தை தெரிந்துகொண்ட ஒரு தீயநோக்கம் கொண்டவனை தனது பக்தை மூலமாக ஆதிபராசக்தி எப்படி வெற்றி காண்கிறாள் என்பதை சின்னத்திரையில் தினமும் காணலாம்.

திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஜெயா டிவியில் இம்மாதம் இத்தொடரை காணலாம்.

பூவிலங்கு மோகன், ஓ.ஏ.கே.சுந்தர், அனுராதாகிருஷ்ணமூர்த்தி, சுப்புலட்சுமி மற்றும் பல முன்னணி சின்னத்திரை நட்சத்திரங்கள் சிம்ரனோடு மின்னப் போகிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் : செல்வபாண்டி. ஒளிப்பதிவு : ஆசாத். இயக்கம் : அர்விந்த்ராஜ். கிரியேட்டிவ் ஹெட் : சுபா வெங்கட்.

1 comments:

  1. said...

    சிம்ரன் ஆத்தா நீ பாசாயிட்டே........

    :)