Thursday, June 12, 2008

தசாவதாரம்!! விஐபிக்கள் புகழாரம்!

உலகிலேயே முதன்முறையாக பத்துவேடத்தில் ஒரே நடிகர் தோன்றும் தசாவதாரம் திரைப்படம் ஜூன் 13 அன்று வெளியாகிறது. படவெளியீட்டுக்கு முன்பாக விஐபிக்களுக்கு சிறப்புக்காட்சிகள் போடப்பட்டு வருகிறது.

படத்தை முதலில் பார்த்த தமிழக முதல்வர் கமல்ஹாசன் ஆஸ்கர் விருதுக்கு தகுதியானவர் என்று புகழாரம் சூட்டினார். இந்நிலையில் சினிமா பிரபலங்களுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கு ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் சிறப்புக் காட்சி போட்டு காட்டினார் கமல்ஹாசன்.

தனது முப்பத்தைந்து ஆண்டுகால நண்பரான ரஜினி படம் பார்க்கவந்ததில் கமல்ஹாசன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசனின் குருநாதரான இயக்குனர் கே.பாலச்சந்தரும் ரஜினியோடு படம் பார்த்தார். சரத்குமார், சத்யராஜ், சூர்யா, ஜோதிகா, பிரபு, ராம்குமார், நாகேஷ், மனோரமா, சந்தானபாரதி, கிரேஸி மோகன், ஆர்.சி.சக்தி, சுந்தர் சி. குஷ்பு என்று கமலுக்கு நெருக்கமான சினிமாவுலகத்தினரும் படம் பார்த்தனர்.

படம் முடிந்ததுமே ரஜினிகாந்த் கமல்ஹாசனை கட்டிப்பிடித்து பாராட்டினார். இயக்குனர் பாலச்சந்தர், மனோரமா உள்ளிட்டோர் பேச வார்த்தைகளில்லாமல் கமல்ஹாசனை கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.

சினிமா பிரபலங்களுக்கு மட்டுமன்றி அரசியல் பிரமுகர்களுக்கு சென்னை வடபழனியில் இருக்கும் பிரசாத் லேப்பில் சிறப்புக் காட்சிகள் போட்டு காட்டப்பட்டு வருகிறது. இதுவரை படம் பார்த்தவர்கள் அனைவருமே கமல்ஹாசனின் நடிப்பாற்றலை சிலாகித்து பேசிவருகிறார்கள்.






2 comments:

  1. Anonymous said...

    I'm thankful with your blog it is very useful to me.

  2. Anonymous said...

    // படத்தை முதலில் பார்த்த தமிழக முதல்வர் கமல்ஹாசன் //

    இதப் பாத்து ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன்...