Wednesday, June 18, 2008

கிரிவலம் ஆரம்பம்!


பஞ்ச் டயலாக்குகளுக்கும், அதிரடி காட்சிகளுக்கும் பெயர் போனவர் இயக்குனர் பேரரசு. கமர்ஷியல் பஞ்சாமிர்தம் கலக்கி கொடுத்த பழனி படத்துக்கு பிறகு திருவண்ணாமலையில் கிரிவலம் வர இருக்கிறார் பேரரசு. பேரரசுவின் படங்களின் தலைப்புகள் அனைத்துமே ஊர் பெயரில் தான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதாலயாவுக்காக கே.பாலச்சந்தர் தயாரிக்கும் திருவண்ணாமலை அரசியல் அடிதடி படமாம். லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டரான அர்ஜூனுக்கு அரசியல்வாதிகள் தரும் தொல்லையும், அதை அசத்தலாக அர்ஜூன் சமாளிப்பதும் தான் கதையாம். இந்தப் படத்திலும் பேரரசு ஒரு முக்கியப் பாத்திரத்தில் தோன்றி பஞ்ச் டயலாக் அடிப்பார் என்கிறார்கள்.

சாய்குமார் வில்லனாக நடிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதி இயக்குகிறார் பேரரசு. மசாலா படங்களுக்கு மஜாவாக இசையமைக்கும் ஸ்ரீகாந்த் தேவா தான் இப்படத்துக்கும் இசையமைப்பாளர்.

1 comments:

  1. said...

    என்னது என்னை வலம் வர போறாங்களா :-))))