Tuesday, April 29, 2008

சாய்மீரா சினிமா - மின்னிதழை வாசிக்க மற்றும் தரவிறக்க...


கார்ப்பரேட் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் மக்கள் நம்பிக்கையோடு முதலீடு செய்யும் பணத்தை முடிந்த மட்டும் பன்மடங்காக பெருக்கியாக வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் பெரிய ஹீரோ, பெரிய நிறுவனம், பெரிய பிராஜக்ட் என வெற்றி வாய்ப்புகள் அதிகமுள்ள பிரம்மாண்டங்களை மட்டுமே நம்பியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இது உலகவிதி. ஆனால் இதற்கு விதிவிலக்கு....

இளமைக் காலங்கள், நான் பாடும் பாடல், உன்னை நான் சந்தித்தேன், உதயகீதம், இதயக்கோயில், உயிரே உனக்காக என்று வெள்ளிவிழா மற்றும் வைரவிழா படங்களை தந்த நிறுவனம். தொடர்ந்து ஒரே நிறுவனம், ஒரே ஹீரோவை வைத்து ஏழு மாபெரும் வெற்றிப் படங்களை தந்தது வட இந்தியத் திரைப்பட உலகையும் வாய்பிளக்க வைத்த சாதனை. அந்த நிறுவனம் ஏன் படத்தயாரிப்பை நிறுத்திக் கொண்டது?

எந்த ஒரு வலிமையான மனிதனாக இருந்தாலும் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லும்போது நிச்சயமாக இரத்த அழுத்தம் ஏறும். எனக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னால் பைபாஸ் செய்ய ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்ற போது இரத்த அழுத்தம் அப்படியே இருந்தது. அப்படிப்பட்ட எனக்கே இரத்த அழுத்தம் ஏறியதுண்டு. எப்போது தெரியுமா?

'அன்புள்ள எம்.ஜி.ஆர்' என்று படத்துக்கு பெயர் சூட்டி அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களிடம் கதை சொன்னோம். அவருக்கு கதை மிகவும் பிடித்து, ”நான் முதல்வராக இருந்தாலும் பரவாயில்லை. கண்டிப்பாக இப்படத்தில் நடிக்கிறேன்” என்றார். அன்புள்ள எம்.ஜி.ஆர், அன்புள்ள ரஜினிகாந்த் ஆன கதை!!

உங்களுக்கு லாட்டரியில் ஒரு லட்சரூபாய் பரிசாக விழுந்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்களா? இல்லை நீங்கள் காதலிக்கும் பெண் உங்கள் காதலை ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சியாக இருப்பீர்களா? மெய்யான மகிழ்ச்சி எது?

சராசரி சினிமாவை மீறிய யதார்த்தம், வியாபார மொழியில். மேற்கத்திய மோகத்தின் ஆதிக்கத்தில் அல்லல்பட்டு கிடக்கும் நகர்வாழ் தமிழர்களுக்கு அவர்கள் கடந்துவந்த, முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையை திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு நல்ல அடையாளம்.

தெளிந்த நீரோடை போல நம் மண்ணின் இசையை சுவாசிக்கும் ஒரு இளைஞன். பரபரப்பான மேற்கத்திய இசையோடு வாழும் ஒரு பெண்.

ஐந்தறிவு ஜீவராசிகளுக்கும் கடவுள் கொடுத்த கொடை காதல். ஆனால் மனித இனம் தவிர்த்து உலகின் எந்த உயிரினத்துக்கும் காதல் தோல்வி கிடையாது. காதல் தோல்வியை கொண்டாடுவோம்.

ஒரு படம் முடிந்தபின் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளப்பணம் கிடைத்துவிடும். மிஞ்சி நிற்பது தயாரிப்பாளரும், படப்பெட்டியும் தான்.

பட்டிதொட்டியெல்லாம் ஒருவருடத்துக்கும் மேலாக ஓடி வசூலில் சாதனை புரிந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா? கோயம்பேட்டுக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம்?

சின்னத்தம்பி அப்படி ஓடும்னு தெரிஞ்சிருந்தா அதுக்கப்புறம் படமே தயாரிச்சிருக்க மாட்டேன். நானே அந்தப் படத்தை வெளியிட்டு பெரிய பணக்காரனாக ஆயிருப்பேன். ஆனால் அந்தப் படத்தின் ஒரு ஏரியா கூட என்னிடம் இல்லை. என்னதான் நடந்தது?

அதிரடி சரவெடி - உங்கள் ஊர் தியேட்டர்களில் நீங்கள் விரும்பும் படங்களை மாதம் முழுவதும் பார்த்து ரசிக்கலாம். வெறும் நூறு ரூபாய் செலவிலேயே. ஆம்... செலவு ஒரே நூறு, சினிமா தினமும் பாரு!! - இதென்ன கலாட்டா?

இதையெல்லாம் தெரிந்துகொள்ள சாய்மீரா சினிமா மின்னிதழை முழுமையாக ஆன்லைனிலே வாசிக்க இங்கே சொடுக்கவும்! அல்லது இதே லிங்கை ரைட் க்ளிக் செய்து மின்னிதழை PDF கோப்பாக டவுன்லோடு செய்தும் வாசிக்கலாம்..

1 comments:

  1. Anonymous said...

    Nice to read that book and my heartiests wishes to pyramid saimira