Wednesday, April 23, 2008

சிம்ரனுடன் “நேருக்கு நேர்!” - வண்ணப் படங்கள்!!

ஜெனிபர் லோஃபஸ் மாதிரி ஜில்லேன்று இருக்கிறார் சிம்ரன். தமிழ் திரையுலகை தன் நளினமான நடனத்தாலும், சுனாமியாய் சுழன்றடித்த அழகாலும் கட்டிப்போட்டவர் இப்போது திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஜெயாடிவியில் ஒளி-ஒலிபரப்பாகும் சிம்ரன் திரை மூலமாக நம் இல்ல வரவேற்பறைக்கே வந்துவிடுகிறார்.


”மாதம் ஒரு கதை'என்கிற கான்செப்டே இந்தத் தொடருக்கு பெரிய வரவேற்பை தந்திருக்கிறது. எனக்கு ஏற்பட்ட சில ஆண்டு திரை இடைவெளி நல்லவேளையாக சிம்ரன் திரை மூலமாக நிரப்பப் பட்டிருக்கிறது” குரல் முழுக்க சந்தோஷம் சிம்ரனுக்கு.


“சிம்ரன் திரையில் முதலில் வந்த கதை வண்ணத்துப் பூச்சி. சுஜாதாவின் கதைன்னா சொல்லவும் வேணுமா? வண்ணமயமான வரவேற்பை எனக்கு பெற்றுத் தந்தது. அடுத்து வந்த 'அனுவும், நானும்' கதையில் மெல்லிய தாய்மையுணர்வை வெளிப்படுத்தும் பாத்திரம். என் வாழ்க்கையின் இப்போதையக் கட்டத்தோடு ஒத்துப் போகும் பாத்திரம் என்பதால் ரொம்பவும் ஒன்றிப்போய் நடித்தேன். அடுத்தது ”நேருக்கு நேர்”. தடாலடியான சிம்ரனை இதில் பார்க்கலாம்”

“அப்படியென்ன தடாலடி?”

“சீறும் பாம்பை பார்த்திருக்கிறீர்களா? சீற்றத்தின் போது நெருப்புத்துண்டு மாதிரி, மின்னல் மாதிரி பளீரிடும் அதன் கண்களை கவனித்திருக்கிறீர்களா? சீண்டிவிட்டால் எந்தப் பெண்ணும் சீறும் பாம்புதான். ஒரு அப்பாவித் தாயையும், அவரது மகளையும் கொடுமைப் படுத்திய வில்லன்களோடு நான் விளையாடும் விளையாட்டு தான் ”நேருக்கு நேர்”, சாதாரண விளையாட்டு அல்ல, மரண விளையாட்டு. சூப்பர் ஸ்டாரை திரையில் பார்த்ததுமே விசிலடிக்கத் தோன்றுமல்லவா? நேருக்கு நேரில் என்னைக் கண்டாலும் எல்லோரும் விசிலடிக்கப் போகிறீர்கள்!”


“அடடே.. முழுக்க முழுக்க ஹீரோயினிஸமா?”

“ம்ம்ம்ம்... கொடுமைக்காரர்களான அண்ணன் - தம்பி இருவரின் வாழ்க்கையிலும் புகுந்து விளையாடும் இரட்டை கதாபாத்திரம், என் நடிப்பின் இன்னொரு பரிமாணம். பழிவாங்கும் கதையின் போக்கில் இயல்பாக நடக்கும் சம்பவங்கள் என்று விறுவிறு சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் உண்டு!! மூக்கைச் சிந்தும் அழுகை, மஞ்சக்கயிறு செண்டிமெண்ட் மட்டும் மிஸ்ஸிங்” ஜாலியாக சொல்லிவிட்டு அடுத்த ஷாட்டுக்கு ரெடியாகிறார் சிலிம்ரன். ம்ம்ம்... இன்னமும் சிலிம்மாக தான் இருக்கிறார்!!


பிரமிட் சாய்மீரா தயாரிப்பில் சிம்ரன் திரையில் இடம்பெறும் மூன்றாவது தொடரான “நேருக்கு நேர்” வரும் திங்கட்கிழமை (28-04-08) முதல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஜெயா டிவியில் இரவு எட்டரை மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. சுபாவெங்கட் கதைக்கு குமரேசன் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். கோபால் ஒளிப்பதிவு செய்ய அழகர் இயக்கியிருக்கிறார்.

1 comments:

  1. said...

    Yesterday I visited your blog and liked it very much! I have found a lot of really interesting and useful information there! The time I have spent reading was wonderful and I may say that you’ve done a great job! There are also wonderful photos! I’ve immediately added your blog to my favorite links and will enter it any time when in need of something positive. Thanks a lot!