"பம்பரக் கண்ணாலே, பச்சைக் குத்தி வந்தாளே?" பாடல் நினைவிருக்கிறதா? பம்பரக் கண்ணால் ஸ்ரீகாந்துக்கு பச்சை குத்தியவரான ஆர்த்தி அகர்வால் நேற்று திடீர் திருமணம் செய்து திரையுலகை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார்.
தெலுங்கு திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்னால் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஆர்த்தி அகர்வால். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக விளங்கிய தருணை துரத்தி துரத்தி நிஜவாழ்க்கையிலேயே காதலித்தார். தருண் இவரது காதலை ஏற்றுக் கொள்ள மறுக்க சினிமா கதாநாயகி போலவே நிஜவாழ்க்கையிலும் தற்கொலைக்கு முயன்றார் ஆர்த்தி.
அதன் பின்னர் அந்த காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்தவர் தமிழில் ஸ்ரீகாந்த் ஜோடியாக "பம்பரக் கண்ணாலே" திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படம் வெற்றிவாய்ப்பை நழுவவிடவே மீண்டும் தெலுங்கில் கதாநாயகியாக சில படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று ஹைதராபாத்திலிருக்கும் ஆரியசமாஜ் என்ற வழிபாட்டு மையத்துக்கு திருமண உடையில் வந்தார் ஆர்த்தி. அங்கே அவருக்கும் அமெரிக்க வங்கி ஒன்றில் பணிபுரியும் உஜ்வால் குமார் என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆர்த்தி மற்றும் உஜ்வாலின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். திரையுலகத் தலைகள் எதுவுமே காணப்படவில்லை. செய்தியை கேள்விப்பட்டு படமெடுக்க வந்த பத்திரிகையாளர்கள் சிலர் தாக்கப்பட்டனர்.
ஆர்த்தியின் நெருங்கிய திரையுலக சகாக்களுக்கு கூட இத்திருமணம் நடைபெறப்போவது தெரியாதாம். சுமார் ஆறுமாத காலமாக சாட்டிங் மூலமாக உஜ்வாலை ஆர்த்தி காதலித்து வந்தாராம். ஆர்த்தி அகர்வாலை வைத்து படமெடுத்து வரும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இந்த திடீர் திருமணத்தால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
Thursday, November 22, 2007
பிரபல நடிகை திடீர் திருமணம்! - தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!!
Posted by PYRAMID SAIMIRA at 11/22/2007 10:45:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment