Friday, November 16, 2007

திவ்யாவின் கோபம்!


பொல்லாதவன் வெற்றி அடைந்திருப்பதால் திவ்யா கூலாக இருப்பார் என்று பார்த்தால் ரொம்பவும் கோபமாக தான் இருக்கிறார். "குத்து ரம்யா" என்று கூப்பிட்டால் "ஹலோ என் பேரு திவ்யா" என்று கூறி முறைக்கிறார். பொல்லாதவனின் அசத்தல் வெற்றியை தொடர்ந்து திவ்யாவுக்கு தமிழிலும், தெலுங்கிலும் படவாய்ப்புகள் குவிகிறது. தெலுங்கு படவாய்ப்புகளை தயவுதாட்சணியமே காட்டாமால் ஆரம்பத்திலேயே வேண்டாம் என்கிறார்.

"தமிழில் நான் நடித்த முதல் இரண்டு படங்கள் சரியாக போகவில்லை. ஆனாலும் என் திறமைக்கு மதிப்பு கொடுத்து தமிழ் திரையுலகம் என்னை அரவணைத்தது. தெலுங்கில் அப்படி இல்லை. நான் நடித்த இரண்டுபடங்கள் ஓடவில்லை என்றதுமே ராசி இல்லாதவள் என்று முத்திரை குத்தியது. எனவே என்னை வாழவைத்த தமிழுக்கே முன்னுரிமை கொடுக்கலாம் என்றிருக்கிறேன்" என்றார். கொடுத்துவச்சதுங்க நம்ம தமிழ்!

அம்மணி இப்போது சூர்யாவுடன் கவுதம் மேனனின் "வாரணம் ஆயிரம்" திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். "தூண்டில்" படம் முடிந்துவிட்டது. அதன் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறார். வெயிட் ரோலாம்.

அதுமட்டுமல்லாமல் பிரபுதேவாவுடன் ஒரு கன்னடபடத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார், சந்தோஷ் சிவன் இயக்கத்தில். பெயர் மாற்றம் யாருக்கு ராசியோ இல்லையோ, குத்து ரம்யாவுக்கு... ஸாரி.. திவ்யாவுக்கு செம ராசி!

1 comments:

  1. Anonymous said...

    romba mukkiyam :-)