Wednesday, November 21, 2007

மீண்டும் வருகிறார் மன்மதராணி!


மன்மத ராசா, மன்மத ராசா பாட்டு பாடிய மன்மத ராணியை நினைவிருக்கிறதா? திருடா திருடியில் அறிமுகமாகிய சாயாசிங் அதன்பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். படங்கள் எதுவும் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.

சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி பரபரப்பை ஏற்படுத்தினார். திருப்பாச்சியில் விஜய்யுடனும், அருளில் விக்ரமுடன் செம ஆட்டம் போட்டார். அதன் விளைவாக விவேக் கதாநாயகனாக நடித்த 'சொல்லி அடிப்பேன்' திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார். ஏனோ தெரியவில்லை, அந்தப்படமும் வெளிவருவதாக தெரியவில்லை. அதன் பின்னர் சில தெலுங்குப் படங்களில் நடித்தார்.

பின்னர் நக்மா பாணியில் தமிழ், தெலுங்கை விட்டு போஜ்புரி மொழியில் நடிக்க ஆரம்பித்தார். கதாநாயகிகள் பஞ்சம் மிகுந்த வறட்சிப் பூமியான போஜ்பூரி சாயாசிங்கை தலையில் வைத்து தூக்கி ஆடியது. போஜ்பூரியில் சில வெற்றிப்படங்கள் தந்து முன்னணி கதாநாயகியாக இருக்கும் நிலையில் சாயா சிங்குக்கு மீண்டும் தமிழில் ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மதுமிதா இயக்கத்தில் இரா.பார்த்திபன் நடிக்கும் படமான 'வல்லமை தாராயோ' திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் சாயாசிங். வித்தியாசமான கதாபாத்திரமாம். கணவன் ரொம்ப, ரொம்ப்ப.. நல்லவனாக இருக்கிறான் என்பதால் விவாகரத்து கோரும் மனைவி பாத்திரமாம். விளங்கிடிச்சி!!!

0 comments: