யார்யா ஆர்யா? என்று கேட்குமளவுக்கு முகத்துக்கு தாடி என்றில்லாமல் தாடிக்குள் முகமாக கடந்த ஓராண்டாக மாறிப்போனது நடிகர் ஆர்யாவின் முகம். இயக்குனர் பாலாவின் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காதா? என்று பல முன்னணி நடிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்க அடித்தது யோகம் ஆர்யாவுக்கு.
இசைஞானி இளையராஜா இசையில், இயக்குனர் பாலா இயக்கும் நான் கடவுள் கடந்த ஓராண்டாக இப்போ வருமோ? எப்போ வருமோ? என்று ரசிகர்களை ஏங்கவைத்துக் கொண்டிருந்தது. ரசிகர்களின் ஏக்கத்துக்கு முடிவு வந்துவிட்டது. ஜனவரி 26 குடியரசு நாளன்று இரண்டு கடவுள்களும் வெள்ளித்திரைக்கு வருவார்கள் என்பதாக தெரிகிறது. ஒரு கடவுள் 'அறை எண் 305'ல் இருக்கிறார். இன்னொருவர் 'நானே கடவுள்' என்று சொல்லிக் கொள்பவர்.
Friday, November 30, 2007
யார்யா ஆர்யா?
Posted by PYRAMID SAIMIRA at 11/30/2007 01:13:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment