'உன்னாலே உன்னாலே' படத்தின் வெற்றிக்கு பிறகு வினய் அடுத்தப் படத்தை ஒப்புக்கொள்ள நீண்டநாள் எடுத்துக் கொண்டார். வெற்றியை தக்கவைத்துக் கொள்ள நல்ல கதையாக, நல்ல பேனராக அமைவதற்காக இவ்வளவு காலம் எடுத்துகொள்ள வேண்டியிருந்தது என்கிறார் வினய்.
மணிரத்னத்தின் உதவியாளரான ஆர்.கண்ணன் இயக்கத்தில் ஜெயம் கொண்டான் படத்தில் நடிக்கிறார் வினய். கதாநாயகியாக பாவனா மற்றும் லேகா வாஷிங்டன் நடிக்கிறார்கள். பிரபல வீஜேவான லேகா வாஷிங்டன் முன்னதாக கெட்டவன் படத்திலிருந்து நீக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
மணிரத்னம், பாலுமகேந்திரா போன்ற பெரிய இயக்குனர்கள் பணியாற்றிய நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ். இவர்கள் கடைசியாக தயாரித்த படம் திருமுருகன் இயக்கிய எம்டன் மகன். அப்படத்துக்கு பிறகு இந்நிறுவனத்தார் தயாரிக்கும் படம் இதுவே. வித்யாசாகர் இசையமைக்கிறார்.
Saturday, November 17, 2007
ஜெயம்கொண்டான்!
Posted by PYRAMID SAIMIRA at 11/17/2007 02:58:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment