Tuesday, February 19, 2008

சுப்பிரமணியபுரம்!


கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பதில் யாருக்கு தான் ஆர்வம் இருக்காது? 1970களின் இந்தி சினிமாவை திரும்பிப் பார்த்த ஓம் சாந்தி ஓமை உலகமே பார்த்து ரசித்து கொண்டாடியது. இப்போது தமிழ் சினிமாவின் முறை. ஒரு தலைராகம் பார்த்திருப்பீர்களே? அதே காலக்கட்டத்துக்கு உங்களை கால இயந்திரம் மூலமாக அழைத்துச் சென்றால் மகிழ்வீர்கள் தானே? நம்மிடம் கால இயந்திரம் இல்லை. ஆனால் சினிமா இருக்கிறது.

1980களின் ஆரம்பத்தில் நடப்பது போன்ற கதை ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. பெல்ஸ் பேண்டோடு ஹீரோ, தாவணியில் ஹீரோயின் என்பதை கற்பனை செய்துப் பார்க்கவே இனிக்கிறது அல்லவா? அதுதான் “சுப்பிரமணியபுரம்”

புதுமுக இயக்குனர் சசிக்குமார் தானே தயாரித்து, இயக்கி ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடக்கிறார். கதைக்களம் மதுரை. சசிக்குமார் இயக்குனர் பாலாவிடமும், பின்னர் அமீரிடமும் பணிபுரிந்தவர். தான் விரும்பிய வகையில் படத்தை இயக்க தானே தயாரிப்பது தான் சரியாக இருக்கும் என்று நம்புகிறாராம்.

சென்னை-600028 படத்தில் ‘விஜயை' இமிடேட் செய்து நடித்த ஜெய் தான் கதாநாயகன். தெலுங்குப் படங்களில் சக்கை போடு போடும் ஸ்வாதி தான் கதாநாயகி. கஞ்சா கருப்பு நகைச்சுவைக்கு.

0 comments: