Friday, February 15, 2008

நடுத்தெருவில் நமீதா ஆட்டம்! திரண்டது பெரும் கூட்டம்!!


ரீமிக்ஸ் மேனியா பிடித்து ஆட்டுகிறது தமிழ் சினிமாவை. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் பாடல்களை ரீமிக்ஸ் செய்வது மட்டுமன்றி பழைய படங்களையும் கூட ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் பாடலான ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதில் தான் சுகம்' பாடல் ரீமிக்ஸ் ஆகிறது.

பயங்கர வேகமான இந்தப் பாட்டுக்கு ஆடப் போகிறவர்கள் லாரன்ஸும், நமீதாவும். லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் பாண்டி படத்தில் இப்பாடல் இடம்பெறுகிறது.

இப்பாடலை படமாக்க திண்டுக்கல்லுக்கு அருகில் செம்பட்டி என்ற பகுதியில் படக்குழுவினர் முகாமிட்டிருந்தார்கள். நமீதாவும், லாரன்ஸும் ஆடிப்பாடுவது போல படமாக்கப்பட்டு வந்தது. நமீதா வந்திருக்கிறார், நடனமும் ஆடப்போகிறார் என்று தெரிந்ததுமே சுற்றியிருந்த எட்டுப்பட்டி கிராமத்து மக்களும் திருவிழாவுக்கு வருவதைப் போல வண்டி கட்டி குடும்பம், குடும்பமாய் படப்பிடிப்புக்கு வந்துவிட அந்தப் பகுதியே ஸ்தம்பித்துப் போனது.

மக்களின் இயல்பு வாழ்க்கை கெட்டதுடன் படப்பிடிப்பும் நடத்த இயலாத நிலையில் படக்குழுவினர் அங்கே படம்பிடிக்க வேண்டிய காட்சிகளை நிலக்கோட்டைக்கு அருகே பேரணைப்பாலம் என்ற இடத்துக்கு சென்று படமாக்க வேண்டியது ஆகிவிட்டது. நமீதாவின் நடனத்தை நேரடியாக கண்டுகளிக்கலாம் என்று கூட்டமாக வந்த ரசிகர்கள் அவரை நேரில் சந்தித்ததே போதும் என்ற திருப்தியோடு ஊர்திரும்பினர்.

0 comments: