Thursday, February 28, 2008

'வண்ணத்துப்பூச்சி' பறந்தது!


கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கன்னித்தீவு போன்ற கதையமைப்புகளை கொண்ட மெகாத்தொடர்கள் மக்களுக்கு தரும் அயர்வு யாவரும் உணர்ந்ததே. வித்தியாசமான கதைகளோடும், மாறுபட்ட வடிவமைப்போடும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தரமான தயாரிப்பில் மக்களுக்கு வழங்கவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டபோது, முதலில் படமாக்க எடுத்துக் கொண்ட கதை அமரர் சுஜாதாவின் “வண்ணத்துப் பூச்சி”. மாறுபட்ட கோணம், அள்ள அள்ள குறையாத சுவாரஸ்யம் என்றாலே அது சுஜாதா தான் என்பது நம் எல்லோரின் ஜீனுக்குள்ளும் பதிந்துவிட்ட ஒரு செய்தி.

அவரது கதையை தொடராக்கி நேற்றைய தினம் (27-2-08) சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சில காட்சிகளை ஒளிபரப்பி, எங்கள் குழுமம் அறிவித்த ஒரு மணி நேரத்திலேயே செய்தி வருகிறது “வண்ணத்துப்பூச்சி கூட்டை விட்டு பறந்துவிட்டது”

இனி, வண்ணங்கள் மட்டுமே இங்கே மிச்சமிருக்கும்!

கலைத்துறை, எழுத்துத்துறை, அவர் பங்கேற்ற ஏனைய எல்லாத் துறைகளிலும் முடிசூடா மன்னராக விளங்கிய சுஜாதா அவர்களுக்கு பிரமிட் சாய்மீரா குழுமத்தின் அஞ்சலிகள்!!

0 comments: