Tuesday, March 11, 2008

”அச்சமுண்டு, அச்சமுண்டு!” - போட்டோ கேலரி


மரத்தை சுற்றி சுற்றி காதலியை காதலித்துக் கொண்டிருந்த பிரசன்னா அஞ்சாதே, சாதுமிரண்டா படங்கள் மூலமாக நெகட்டிவ் ரோல்களிலும் நடித்து தன் நடிப்புத்திறனை நிரூபித்திருக்கிறார். அவரது திறமைக்கு தீனிபோடும் விதமாக அடுத்து வரவிருப்பது ”அச்சமுண்டு! அச்சமுண்டு!”

சீர்காழியில் பிறந்து இப்போது அமெரிக்காவில் வசிக்கும் அருண் வைத்தியநாதன் இத்திரைப்படத்தை இயக்க இருக்கிறார். அமெரிக்காவில் நடிப்பு சம்பந்தப்பட்ட கல்வியை கற்ற அருண் வைத்தியநாதனுக்கு தமிழில் படங்கள் உருவாக்குவதில் தான் ஆர்வம் அதிகமாம்.

கதாநாயகன் பிரசன்னா, கதாநாயகி ஸ்நேகா தவிர்த்து இப்படத்தில் பணிபுரியப் போகிறவர்கள் எல்லாருமே ஹாலிவுட்டில் பணியாற்றிய கலைஞர்கள். படத்துக்கு விஷூவல் எஃபெக்ட்ஸ் செய்யப்போகிறவர் மதுசூதனன். இவர் லார்டு ஆஃப் தி ரிங்ஸ், ஸ்பைடர்மேன்-3, ஆளவந்தான் போன்ற படங்களுக்கு பணியாற்றியவர். ரே காலின்ஸ் என்ற ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் படத்தின் ஒளிப்பதிவினை மேற்கொள்ளவிருக்கிறார்.

அமெரிக்காவைச் சார்ந்த ஓம் சினிமாஸ் யூ.எஸ்.ஏ. லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை-600028 படத்தை தயாரித்த எஸ்.பி.பி.சரணின் கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையிலான இப்படத்தை அமெரிக்காவின் நியூஜெர்சி மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் இருபதே நாட்களின் படப்பிடிப்பினை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் அருண் வைத்யநாதன்.











1 comments:

  1. Anonymous said...

    Arun is a senior and famous tamil blogger
    http://arunhere.com/pathivu