Wednesday, March 12, 2008

நதியாவுக்கும், சுந்தர்.சிக்கும் “சண்ட!”

ஆரம்பத்தில் 'பொறுக்கி'யாக பூஜை போடப்பட்ட படம் பின்னர் தயாரிப்பாளர் சங்க வேண்டுகோளின் படி 'சண்ட'யாக மாறியிருக்கிறது. பூவா தலையா?, மாப்பிள்ளை போன்ற படங்களில் சொல்லப்பட்ட மாமியார் - மருமகன் முட்டல் மோதல் தான் கதை என்றாலும் மசாலா மன்னன் ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் பார்க்க புத்தம்புதுசாக இருக்கும் என்கிறார்கள்.

சுந்தர்.சி. கதாநாயகனாக நடிக்க அவரது அழகான மாமியாராக நதியா நடிக்கிறார். நெப்போலியனுக்கு மாமானார் வேடம் என்பது ஸ்டில்களைப் பார்த்தால் தெரிகிறது. புதுமுகம் ராகினி கதாநாயகி. படத்துக்கு பூஜை போடப்பட்ட பிறகு ‘நமீதா இல்லாமல் ஷக்தி சிதம்பரம் படமா?' என்று நமீதா ரசிகர்கள் கொதித்து எழ, அவசர அவசரமாக நமீதாவின் வெயிட்டுக்கேற்ப ஒரு வெயிட்டான ஒரு ஜாலி கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். படத்தின் கவர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை நமீதா பார்த்துக் கொள்வார் என்கிறார்கள்.










0 comments: