Monday, March 17, 2008

ஜருகண்டி.. ஜருகண்டி.. குசேலடு ஒஸ்தாடு!!


மம்முட்டி நடித்த ‘கத பறயும் போள்', பி.வாசுவின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார், பசுபதி, மீனா, நயன்தாரா நடிக்க தமிழில் ரீமேக் செய்யப்படுவது அரதப்பழசான செய்தி. படம் தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்படுகிறது. இருந்தாலும் பூஜை மட்டும் தமிழுக்கு தனியாகவும், தெலுங்குக்கு தனியாகவும் போடப்பட்டிருக்கிறது.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக ஏ.வி.எம்.மில் குசேலன் படத்துக்கு தமிழ்த் திரைப்பட முன்னணி படைப்பாளிகள் முன்னிலையில் பூஜை போடப்பட்டது. இப்போது தெலுங்குக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹை-டெக் சிட்டியில் பூஜை போடப்பட்டிருக்கிறது. பூஜைக்கு தெலுங்கு திரையுலகமே திரண்டு வந்து சூப்பர்ஸ்டாரை வாழ்த்தியிருக்கிறது. தெலுங்கில் இப்படம் “குசேலடு” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் தாசரிநாராயண ராவ், மெகாஸ்டார் சிரஞ்சீவி, டாக்டர் ராஜசேகர், வெங்கடேஷ், ஜகபதி பாபு, இயக்குனர் பி.வாசு, கே.ராகவேந்திரராவ் உள்ளிட்ட பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர். சூப்பர் ஸ்டாரின் படையப்பா படம் தெலுங்கில் வசூல்சாதனை நிகழ்த்தியதற்கு பிறகு அவரது படங்களுக்கு தனி மார்க்கெட் அந்தஸ்து அங்கே ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: