Tuesday, March 25, 2008

இன்னொரு வாரிசு வெள்ளித்திரைக்கு தயார்!


இது இந்தியா முழுக்க வாரிசுகளின் காலம் போலிருக்கிறது. தென்னிந்தியாவில் ராஜ்குமாரின் வாரிசுகள் கன்னடத்திலும், என்.டி.ஆரின் வாரிசுகள் தெலுங்கிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் சொல்லவும் வேண்டுமா?

தென்னிந்தியாவில் மட்டுமன்றி வட இந்தியாவிலும் வாரிசுகளின் ஆட்சிதான். அபிஷேக் பச்சன், ஹ்ரித்திக் ரோஷன், ரன்பீர் கபூர் ஆகியோரைத் தொடர்ந்து முன்னாள் சினிமா நட்சத்திரமும், இன்னாள் அரசியல் பிரமுகருமான சத்ருகன் சின்ஹாவின் மகன் லவ் சின்ஹா (பேரை கேட்டாலே அதுருதுல்ல) களமிறங்குகிறார்.

”எல்லோரையும் போலவே என்னுடைய மகனும் என்னைவிட சிறந்த, வெற்றிகரமான நடிகனாக பரிணமிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் சத்ருகன் சின்ஹா. சாடியான் என்று பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் லவ் சின்ஹா.

இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு காலத்தில் பாலிவுட்டை அழகாலும், கவர்ச்சியாலும் கட்டிப்போட்ட நடிகைகளான ரேகா, ஹேமமாலினி இருவரும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கிறார்கள். கதாநாயகனுக்கு தந்தையாக ரிஷிகபூரும் நடிக்கிறாராம்.

வட இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் இது!

0 comments: