Thursday, December 13, 2007

ஆயிரம் யானை பலம் கொண்டவன்!

'ஆயிரம் யானைகளின் பலம் கொண்டவன்' என்பது தான் 'வாரணம் ஆயிரம்' படத்தின் தீம். மறுபடியும் ஒரு கலக்கல் Action படத்தை கவுதம் + சூர்யா காம்பினேஷனில் எதிர்பார்க்கலாம். "காக்க காக்க" படத்தின் அதிரடி வெற்றிக்கு பிறகு இயக்குனர் கவுதமும், சூர்யாவும் வெவ்வேறு பரிமாணங்களில் தங்களது உயரத்தை அடைந்திருக்கிறார்கள். எனவே உச்சபட்ச எதிர்பார்ப்பு இப்படத்துக்கு இருக்கிறது. இயக்கம் கவுதம் என்றாலே இசை ஹாரிஸ் ஜெயராஜ் என்பது வழக்கமாகி விட்டது.

கதாநாயகியாக முதலில் தீபிகாபடுகோனே பேசப்பட்டார். அவர் ஷாருக்கின் ஓம் சாந்தி ஓமில் பிஸியாகி விட்டதால் சமீரா கதாநாயகியாகியிருக்கிறார். இவரும் தீபிகாவுக்கு இணையான அழகோடு தான் இருக்கிறார். தசாவதாரம் படத்தையும் இப்படத்தையும் ஒரே நேரத்தில் தயாரிப்பதால் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு இரட்டை டென்ஷன் + இரட்டிப்பு மகிழ்ச்சி.











0 comments: