Monday, December 17, 2007

மூன்று சகோதரர்கள் இணையும் படம்!


திரையுலகில் அத்திபூத்தாற்போல சில அதிசயங்கள் நடப்பதுண்டு. எப்போதாவது தந்தையும், மகனும் இணைந்து நடிப்பார்கள். தந்தை இயக்கத்தில் மகன் நடிப்பார். அண்ணன் இயக்கத்தில் தம்பி நடிப்பார். இப்போது மூன்று சகோதரர்கள் இணைந்து ஒரே படத்தில் கதாநாயகர்களாக நடிக்கப் போகிறார்கள். தமிழில் அல்ல, கன்னடத்தில்!

கன்னட திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் டாக்டர் ராஜ்குமார் - இருந்தபோதிலும் சரி, இறந்தபோதிலும் சரி. அவரது மூன்று மகன்களும் தந்தையார் வழியிலேயே தங்களை நடிப்புத்துறையில் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

ராகவேந்திரா, புனித் மற்றும் சிவராஜ்குமார் மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் பெயர் "ஓம்". ரவிஸ்ரீவத்சா இயக்குகிறார். அதிரடி சண்டைக்காட்சிகள் நிரம்பிய த்ரில்லர் ஆக இப்படம் இருக்கும் என்று இயக்குனர் தெரிவித்தார். இது குறித்த அறிவிப்பு கடந்த சனிக்கிழமை பெங்களூரில் அறிவிக்கப்பட்டது. பிரமிட் சாய்மீரா குழுமம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது.

வரும் ஆண்டு ஏப்ரல் 24 அன்று டாக்டர் ராஜ்குமாரின் பிறந்தநாளன்று இத்திரைப்படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்துவருகிறது.

1 comments:

  1. said...

    ஜிஜிபி

    ஏற்கனவே பிரபு தேவா, ராஜூ சுந்தரம், நாகேந்திர பிரசாத் சகோதரர்கள் நடிச்சு ஒன் டூ திரி என்ற பெயரில் படம் வந்ததே.