Tuesday, January 8, 2008

'அஞ்சாதே!' - அதிரடி ஸ்டில்ஸ்

சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சிறிய இடைவெளி விட்டு ‘அஞ்சாதே' மூலமாக மிரட்ட வருகிறார் இயக்குனர் மிஸ்கின். நரேன் கதாநாயகனாக நடிக்க சென்னை-28 கதாநாயகி விஜயலஷ்மி அவருடன் இணைசேர்கிறார். சாக்லேட் பாயாக இதுவரை வலம் வந்த பிரசன்னா வித்தியாசமான வேடம் ஒன்றில் தோன்றுகிறார். 'இதுவரை இருந்த பிரசன்னா வேற, இனிமே வரப்போற பிரசன்னா வேற' என்று பயமுறுத்துகிறார்கள்.

நேமிசந்த் ஜபக் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை 'சித்திரம் பேசுதடி' சுந்தர் சி.பாபு. பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், பாண்டியராஜன் ஆகியோரும் நடித்திருக்கும் இத்திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருமென தெரிகிறது.












0 comments: