Friday, January 25, 2008

'சண்டை' ஆனது ‘பொறுக்கி'


சில மாதங்களுக்கு முன்பு ‘பொறுக்கி' என்ற பெயரில் சுந்தர் சி நடிக்க ஷக்தி சிதம்பரம் இயக்கும் படத்துக்கு பூஜை போடப்பட்டபோது எல்லோருமே அதிர்ந்தார்கள். தயாரிப்பாளர் கவுன்சில் கேட்டுக் கொண்டதற்கிணங்க படத்தின் பெயரை 'மகாமகம்' என்று மாற்றினார் இயக்குனர் ஷக்தி.

நடிக்க ஆரம்பித்தற்கு பின்னர் தலைநகரம், வீராப்பு என்று வில்லன்களை புரட்டியெடுக்கும் ஆக்சன் ரோல்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார் சுந்தர் சி. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. அதிரடி சண்டைக்காட்சிகளுக்கு வெகுவான முக்கியத்துவத்தோடு படத்தின் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதிரடியான இந்த திரைப்படத்துக்கு ‘மகாமகம்' என்ற பெயர் சரியாக பொருந்தவில்லை என்று படக்குழுவினர் கருதியதால் மீண்டும் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. “சண்டை”!!!

வழக்கமாக எல்லா ஷக்தி சிதம்பரம் படங்களிலும் கட்டாயம் இடம்பெறும் நமீதா இந்தப் படத்தில் முதலில் இல்லை என்று சொல்லப்பட்டது. படத்தின் கமர்சியல் வேல்யூ கருதி இப்போது மீண்டும் நமீதாவை புக் செய்திருக்கிறார்கள். ராகிணி, நதியா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளை மட்டும் படமாக்க நவீன சிறப்பு கேமிரா ஒன்றினை பயன்படுத்துகிறார்களாம்.

0 comments: