Thursday, January 17, 2008

சூப்பர்ஸ்டாரின் ‘குசேலன்'


நாடே எதிர்பார்க்கும் ரஜினி + ஷங்கரின் ரோபோவுக்கு முன்பாக ரஜினி இன்னொரு திரைப்படம் நடிக்கிறார் என்று சொல்லியிருந்தோம். அத்திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சக்கைபோடு போடும் ‘கத பறயும் போள்' திரைப்படத்தின் ரீமேக்கில் ரஜினி நடிக்கிறார்.

சமூக ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படாத இரு நண்பர்களின் தூய நட்பு தான் திரைப்படத்தின் கரு. சூப்பர் ஸ்டாரின் நண்பராக, முடிவெட்டும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பசுபதி. துரியோதனன் - கர்ணன் நட்புக்கு அடுத்ததாக புராணங்களில் பேசப்படுவது கிருஷ்ணர் - குசேலர் நட்பு. எனவே நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இத்திரைப்படத்துக்கு ”குசேலன்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

ரஜினி இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்திகளை மறுத்த இயக்குனர் பி.வாசு, சூப்பர்ஸ்டாரின் திரையுலக வாழ்க்கையில் பெயர் சொல்லக்கூடிய கதாபாத்திரமாக “குசேலன்” கதாபாத்திரம் அமையும் என்றார். தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் தயாரிக்கப்படும் இத்திரைப்படம் 2008 ஆகஸ்டு மாதம் வெளிவரும் என்று தெரிகிறது.

இடையில் ஷங்கரின் “ரோபோ” படத்துக்கு பெயர் மாற்றுவது சம்பந்தமாக விவாதம் நடைபெற்று வருகிறது. “ரோபோ” என்ற பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழக அரசு தமிழ் படங்களுக்கு தரும் கேளிக்கை வரிச்சலுகை கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. சுமார் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் படத்துக்கு கேளிக்கை வரி விதிக்கப்பட்டால் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழில் பெயர் வைக்க ஷங்கர் ஆலோசித்து வருகிறார்.

4 comments:

  1. said...

    ரோபோ படத்திற்க்கு தமிழ் பெயர் வேண்டுமா?நான் சொல்லவா இயந்திரன்.இதைவிட பொருத்தமான பெயர் வேறு இருக்காது.ஷங்கரிடம் கொஞ்சம் சிபாரிசு பன்னுங்க.

  2. said...

    ரோபோ படத்திற்க்கு தமிழ் பெயர் நான் சொல்லவா?எந்திரன், இயந்திரன்.இதைவிட பொருத்தமான பெயர் தமிழ் அகராதியில் கிடைப்பது கொஞ்சம் கடினம்தான்.அகவே ஷங்கர் அவர்களிடம் கொஞ்சம் சிபாரிசுக்கு சொல்லவும்.

  3. said...

    ரோபோ படத்திற்க்கு நான் தமிழ் பெயர் சொல்லவா?????? எந்திரன், இயந்திரன்.இதைவிட பொருத்தமான பெயர் தமிழ் அகராதியில் கிடைப்பது அரிது.ஷங்கர் அவர்களிடம் கொஞ்சம் சிபாரிசுக்கு சொல்லவும்.

  4. said...

    பி.வாசுவா? ஆண்டவா...அப்ப குசேலனைப் பாக்க யோசிக்கத்தான் வேணும். அவர் அள்ளித் தெளிக்கிற மசாலா வாடைய நெனைக்கும் போதே பயமா இருக்கே.