Wednesday, January 2, 2008

முதலிடத்தில் ரேகா, ஐ.பி.எஸ்.




பொழுதுபோக்கில் புரட்சியையும், புதுமையையும் ஒருசேர படைக்கும் பிரமிட் சாய்மீரா குழுமம் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பில் ரேகா, ஐ.பி.எஸ். என்ற நெடுந்தொடர் மூலமாக பிள்ளையார் சுழி போட்டது தெரிந்ததே.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை உங்கள் இல்ல வரவேற்பரையை அலங்கரித்து வரும் ரேகா, ஐ.பி.எஸ். நெடுந்தொடரில் விஜய் ஆதிராஜ் கதாநாயகனாகவும், அனுஹாசன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.

கரண் டிவி நிறுவனத்தால் பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட சமீபத்திய கருத்துக் கணிப்பில் கலைஞர் டிவி நெடுந்தொடர்களில் மக்களின் மனதை அதிகம் கவர்ந்தது ரேகா, ஐ.பி.எஸ். நெடுந்தொடரே என்பது வெளியாகியிருக்கிறது. கலைஞர் டிவியில் வெளிவந்த மழலைப்பட்டாளம் நிகழ்ச்சியும் சுட்டிகளின் ஆரவாரமான வரவேற்பை பெற்றிருக்கிறது.

0 comments: